
கொழும்பு: 2026 ஆசிய ரக்பி சாம்பியன்ஷிப் தொடரில் இலங்கைக்கும் தென் கொரியாவுக்கும் இடையே நடைபெறவிருந்த போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.
விசா தொடர்பான சிக்கல்கள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஆசியா ரக்பி தெரிவித்துள்ளது.
இந்தப் போட்டி தென் கொரியாவின் இன்சியான் நகரில் நடைபெறவிருந்தது. இருப்பினும், இலங்கை தேசிய ரக்பி அணியால் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தேவையான பயண விசாக்களைப் பெற முடியாததால், போட்டி திட்டமிட்டபடி நடைபெற இயலாமல் போனது.
பல்வேறு சாத்தியமான தீர்வுகளை ஆராய்வதற்காக, இலங்கை ரக்பி மற்றும் கொரியா ரக்பி யூனியனுடன் இணைந்து பணியாற்றியதாக ஆசிய ரக்பி தெரிவித்துள்ளது. இருப்பினும், விசா நடைமுறைகளை உரிய நேரத்தில் முடிக்க முடியாததால், போட்டியை ரத்து செய்வது தவிர்க்க முடியாததாகிவிட்டது.

Comments